கடைசி ஓவர் வரை ஆட்டம் செல்லும் என்று நினைக்கவில்லை.. தவறவிட்ட கேட்ச் வாய்ப்பு பெரிய விஷயமாக மாறியது.. வெற்றிக்குப் பின்னர் கம்மின்ஸ் பேட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வெற்றிக்கான காரணம் குறித்துக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. ட்ராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்களும், நித்திஷ் ரெட்டி 42 பந்துகளில் 76 ரன்கள், கிளாஸன் இறுதியாக 19 பந்துகளில் 44 ரன்கள் விளையாடிக் குவித்தார்கள். ராஜஸ்தான் அணித்தரப்பில் ஆவேஸ் கான் நான்கு ஓவர்கள் பந்து வீசி 39 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் என்ற இரண்டு பெரிய விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது. அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

- Advertisement -

ஜெயஸ்வால் 40 பந்துகளில் 67 ரன்களும், ரியான் பராக் 49 பந்துகளில் 77 ரன்களும் குவித்தனர்.இறுதியில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட, அஸ்வின் மற்றும் ரோமன் போவல் ஆகியோர் களத்தில் இருந்தனர். முதல் பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்து தர, அடுத்த நான்கு பந்துகளில் போவல் 10 ரன்கள் குவித்தார். இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட, போவல் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதனால் ஒரு ரன் வித்யாசத்தில் சன்ரைசர்ஸ் அணி திரில்லர் வெற்றியை ருசித்தது. வெற்றிக்கு பின்னர் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறும் பொழுது
“இது ஒரு அற்புதமான ஆட்டம். கடைசி பந்து வரை ஆட்டம் எங்கள் பக்கம் இருப்பதாக நான் உணரவில்லை. இது டி20 கிரிக்கெட் என்பதால் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை முடித்து பார்த்து பழகி விட்டோம். கடைசி ஓவர் வரும்போது ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று நினைத்தேன்.

- Advertisement -

புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 6 யார்க்கர் பந்துகளை வீசினார். கடைசி பந்தில் விக்கெட் கிடைக்கும் என்று நினைக்கவில்லை சூப்பர் ஓவர் வரை செல்லும் என்று நினைத்தேன். நடராஜனும் அற்புதமாக பந்து வீசினார் இருவருமே இறுதிக்கட்டத்தில் சிறப்பாக பந்து வீசும் யார்க்கர் பவுலர்கள். சிறந்த இளம் வீரர் இருவருக்கு நாங்கள் விட்டுக் கொடுத்து கேட்ச் வாய்ப்புகள் ஆட்டத்தில் பெரிய விஷயமாக மாறியது.

இதையும் படிங்க:இரண்டு நல்ல பந்துகள் மட்டுமே எனது குறியாக இருந்தது.. இது டி20 கிரிக்கெட் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்.. ஆட்டநாயகன் விருது பெற்ற புவனேஸ்வர் குமார் பேட்டி

நிதிஷ் ரெட்டி இந்த போட்டியில் அபாரமாக விளையாடினார். 10 பந்துகளை விளையாடிய பிறகு அதற்குப் பிறகு அவரது ஆட்டம் வேறு மாதிரி செல்கிறது. அவர் மேலும் இரண்டு ஓவர்களையும் வீசினார் அவர் சன்ரைசர்ஸ் அணிக்கு கிடைத்த சிறந்த ஆல் ரவுண்டர்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles