தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக இருக்கும் ரகானே முக்கிய முடிவை ஒன்று எடுக்க வேண்டும் என இந்திய அதிரடி முன்னாள் ஆட்டக்கார வீரேந்தர் சேவாக் கூறியிருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் மினி ஏலத்தில் 25.50 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் வாங்கப்பட்டார். ஆனால் கடந்த ஐந்து போட்டிகளாக கொல்கத்தா அணிக்கு அவர் எந்தவித சிறப்பான பங்களிப்பையும் கொடுக்கவில்லை.
இது குறித்து வீரேந்தர் சேவாக் பேசும்போது “இங்கே பாருங்கள் நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர் சரியாக விளையாடவில்லை. இப்போது நீங்கள் அவரை வெளியில் வைத்தால் ‘பெரிய விலை கொடுத்து வாங்கியவர் எப்படி வெளியில் வைக்கலாம்” எனது விமர்சனங்கள் வரலாம் என்று நீங்கள் அச்சப்படுகிறீர்கள்”
“எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் சரியாக விளையாட விட்டால் வெளியில் வைக்க வேண்டும். இதற்கு நீங்கள் வெட்கப்பட கூடாது. உங்கள தவறை ஏற்றுக்கொண்டு உடனடியாக மாறிக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

