இந்திய டி20 அணியில் இருந்து சூரியகுமாரை ஒட்டுமொத்தமாக வெளியில் அனுப்ப தேர்வு யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டன் பதவி சூரியகுமார் யாதவுக்கு கொடுக்கப்பட்ட பிறகு அவர் கடைசியாக நியூசிலாந்து தொடரில் மட்டுமே சிறப்பாக விளையாடியிருக்கிறார். வேறு எந்த இரு நாட்டுத் தொடர்களிலோ இல்லை ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையிலும் சரியாக விளையாடவில்லை.
இதன் காரணமாக அவரை நீக்குவதற்கு இந்திய தேர்வுக் குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த டி20 உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் இரண்டும் 2008 ஆம் ஆண்டு நடக்கிறது. அதற்கு இன்னும் மூன்று வருடங்கள் இருப்பதால் சூரியகுமார் யாதவுக்கு ஏற்கனவே 35 வயது ஆகிவிட்டதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.
மேலும் அவரை நீக்கிவிட்டு அவருடைய இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ரஜத் படித்தார் இருவரில் ஒருவரை கொண்டுவர யோசிப்பதாக கூறப்படுகிறது. மேலும் திலக் வர்மா இடமும் பிரச்சினையில் இருப்பதாக தெரிகிறது.

