இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி எளிதாக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு குயிண்டன் டி காக் அதிரடி சதம் அடித்து 60 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் 34 பந்தில் 66 ரன்கள், பிரப்சிம்ரன் சிங் 39 பந்தில் 80 ரன்கள் எடுத்தார்கள். பஞ்சாப் அணி 17 ஓவரில் டார்கெட்டை அடித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் சூரிய குமார் யாதவ் அனுப்பப்பட்டார். ஆனால் அவரை பவர் பிளேவுக்கு வெளியே நான்காவது இடத்தில் அனுப்பி இருக்க வேண்டும். மேலும் கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரூதர்போர்டு இருக்கும்பொழுது ஹர்திக் பாண்டியா உள்ளே வந்து 12 பந்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை அணிக்கு பெரிய சரிவை உண்டாக்கினார். அந்த அணி தோல்விக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா முடிவுகள் காரணமாக அமைந்தது.

