இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகள் டெல்லி தொடக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல் எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு மூன்றாவது இடத்தில் வந்த நிதிஷ் ராணா சிறப்பாக விளையாடி 44 பந்தில் 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய கேஎல்.ராகுல் 47 பந்தில் சதம் அடித்து, இறுதிவரை களத்தில் நின்று 67 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 152 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் டெல்லி அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் கேஎல்.ராகுல் 152 ரன்கள் எடுத்ததின் மூலம், ஒரு டி20 போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராகவும், ஐபிஎல் தொடரில் 150 ரன்கள் தாண்டி எடுத்த முதல் இந்திய வீரராகவும் பிரம்மாண்ட சாதனை படைத்தார். இதற்கு முன்பாக அபிஷேக் ஷர்மா 141 ரன்கள் எடுத்திருந்தார்.

