இனிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் 15 வயதான வைபவ் சூர்யவன்சியுடன் இணைந்து விளையாடுவது குறித்து பேசி இருக்கிறார்.
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் இவர்கள் இருவருமே இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.
இது குறித்து ஜெய்ஸ்வால் பேசும்பொழுது ” நிச்சயமாக சூரியவன்சி உடன் இணைந்து விளையாடுவது எனக்கு அருமையாக இருக்கிறது. அவர் பந்தை அடித்து விளையாடுவதை எதிர்முனையில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. நான் இதை ரசிக்கிறேன்”
“முதலில் நானே இளமையான வீரன்தான். நான் அவருக்கு சீனியர் என்ற எண்ணத்தில் இல்லை. ஆனால் அவருக்கு 15 வயதாகிறது என்பதால் என்னை சீனியர் என்று சொல்கிறார்கள். இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

