சொந்த காசுல சூனியம்.. உலகக்கோப்பையை இந்தியாவில் ஆஸ்திரேலியா வெல்ல முக்கிய காரணம் இதுதான்.. டேவிட் வார்னர் திடுக் தகவல்

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து உலகக் கோப்பையை இழந்தது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.

- Advertisement -

அந்த வடு இந்திய அணி அடுத்த உலகக் கோப்பையை கைப்பற்றும் வரை ஆறாது மனதில் நீங்க இடம் பிடித்து இருக்கும். இந்த சூழ்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் டேவிட் வார்னர், முற்றிலும் இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலையில் எங்களால் உலகக் கோப்பையை எவ்வாறு கைப்பற்ற முடிந்தது என்பது குறித்து விரிவான தகவலை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“இறுதிப் போட்டி நடந்த அகமதாபாத் மைதானம் 2 அணிகளுக்குமே பொதுவான மைதானமாகத்தான் இருந்தது. ஏனெனில் இரண்டு அணிகளுமே அந்த மைதானத்தில் குறைந்த போட்டிகளில் மட்டும் விளையாடி இருந்தது. இதில் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் அந்த மைதானத்தில் சுற்றி அமர்ந்திருந்த ஒரு லட்சம் இந்திய ரசிகர்கள் மட்டுமே.

- Advertisement -

இந்தியாவிற்கு வந்து விளையாடும் போதெல்லாம் மைதானங்களில் இந்திய ரசிகர்கள் மட்டுமே நிரம்பி இருப்பார்கள். அந்தச் சூழ்நிலை எங்களுக்கு நன்றாக பழகிவிட்டது. அகமதாபாத் மைதானம் ஆஸ்திரேலியாவின் எம்சிஜி மைதானத்தை போன்று இருக்கும். அதனால் ஒரு ரன் மற்றும் இரண்டு ரன்கள் எடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினோம்.

இது ஒரு புறம் இருந்தாலும் 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஐபிஎல் தொடர் விளையாட வந்ததால் இங்குள்ள அனைத்து மைதானங்களையும் நன்றாக படிக்க முடிந்தது. இந்திய மைதானங்கள் ஒரு நாள் ஆட்டங்களுக்கு எவ்வாறு இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு எவ்வாறு இருக்கும், டி20 கிரிக்கெட் எவ்வாறு இருக்கும், மேலும் மைதானங்களில் கருப்பு மண் மற்றும் சிகப்பு மண்களுக்கு இடையேயான வித்தியாசம், முதல் இன்னிங்ஸில் பந்து திரும்பும் அல்லது இரண்டாவது இன்னிங்ஸில் பந்து திரும்புமா? என்பது போன்ற தொழில்நுட்பங்களை முழுவதுமாக படிக்க முடிந்தது.

- Advertisement -

மேலும் இந்திய ஆடுகளங்களில் பயிற்சி பெற்றதும், கணக்கில்லாத வலைப்பந்துவீச்சாளர்கள் மூலம் பயிற்சி பெற்றதும் நல்ல அனுபவமாக அமைந்தது என்று டேவிட் வார்னர் கூறியிருக்கிறார். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்று கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததற்கான காரணம் ஜார்ஜ் டெய்லி தன்னிடம் கூறியதாக அஸ்வின் ஒரு முறை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:

இதன் மூலம் நன்கு தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர்களால் யாருக்கு அதிக சாதகம் என்று. இந்தியர்களை விட மற்ற நாட்டு வீரர்கள் இங்குள்ள சூழ்நிலையை நன்கு அறிந்து கொண்டு சென்று விடுகிறார்கள். அது உலகக்கோப்பை போன்ற மிக முக்கிய தொடர்களில் அவர்களுக்கு பெரும் உதவி வகிக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles