இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக மாபெரும் இலக்கை துரத்தி பஞ்சாப் புதிய சரித்திர சாதனையை படைத்திருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. கேஎல்.ராகுல் கடைசி வரையில் களத்தில் நின்று 67 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு ப்ரியன்ஸ் ஆர்யா 17 பந்தில் 43 ரன், பிரப்சிம்ரன் சிங் 26 பந்தில் 76 ரன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழக்காமல் 36 பந்தில் 71 ரன்கள் எடுத்தார்கள். பஞ்சாப் 18.5 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் வெற்றிகரமாக துரத்தியதே அதிகபட்ச சேசிங் சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது இதை பஞ்சாப் தானே முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.

