இன்று டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 115 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
அவர் இந்த போட்டியில் அடித்த சதத்தை யாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்பது குறித்தும், மேலும் சிஎஸ்கே அணியின் உள் சூழ்நிலை எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
இது குறித்து சஞ்சு சாம்சன் பேசும்போது “அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கை அவர்களது பொறுப்புணர்வை காட்டியது. நாங்கள் முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த போதும் கூட வெறும் 50 வினாடிகள் மட்டுமே அணி மீட்டிங் நடத்தப்பட்டது. அங்குள்ள அனைவரும் மிகவும் நல்லவர்கள்”
“சிஎஸ்கே எனக்கு வேறு ஒரு அணி போலவே தெரியவில்லை. மேலும் பிளம்மிங் வேலை மிகவும் சவாலானது. எனவே என்னுடைய சதத்தை அவருக்கு அர்ப்பணிக்க விரும்பி நான் அவருக்கு சல்யூட் செய்வது போல கொண்டாடினேன்” எனக் கூறியிருக்கிறார்.

