இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் லீக் தொடரில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்திருந்தது. இதில் சிறப்பாக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் அரை சதம் அடித்த நிலையில் சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.
இதில் முதலில் விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் வேகமாக விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் சூர்யா 49 பந்துகளை எதிர்கொண்டு 10 போர் மற்றும் 4 சிக்ஸ் என அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி 161 ரன்கள் இலக்கை எட்ட முக்கிய காரணமாக அமைந்தார். இவருக்கு அடுத்ததாக திலக் வர்மா 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலமாக சூர்யா இந்திய கேப்டனாக சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார். அதாவது 84 ரன்கள் எடுத்ததன் மூலமாக டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக ரோஹித் சர்மா கடந்த டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 92 ரன்கள் எடுத்ததை அதிகபட்ச சாதனையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

