நடப்பு t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்ததாக வருகிற வியாழக்கிழமை இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு அரை இறுதி போட்டியில் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் விளையாட தடைவிக்கப்படலாம் என்று சமூகவலைதளங்களில் தற்போது செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.
கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சாம்சன், போட்டியை முடித்து வெற்றி கொண்டாட்டத்தின் போது செலிப்ரேஷனில் ஈடுபட்டார். எனவே இது ஐசிசி நடத்தை விதிமுறைகளை மீறுவதாக கருதப்படுகிறதா என்பதை பார்க்கலாம். ஐசிசி நடத்தை கிரிக்கெட்டின் உணர்வுகளுக்கு எதிரான வீரர்களின் மைதான நடத்தை உள்ளிட்ட விஷயங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. எனவே சாம்சனின் விஷயத்தில் ஹெல்மட்டை வீசுவது நிலை 1 குற்றமாக பார்க்கப்படுகிறது.
இது நிலை 1 மீறலாகும். எனவே இது அவருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் அல்லது அவரது நடத்தையில் இரண்டு புள்ளிகள் குறைக்கப்படலாம். இதனால் அவரது ஃபார்மை கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று இந்திய அணி நம்புகிறது. மேலும் அவ்வாறு அரை இறுதி போட்டிக்காக ஏற்கனவே மும்பை சென்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

