நல்லா ஆடுங்க.. செமி பைனலில் பாகிஸ்தான் இந்தியாவ தோற்கடிச்சா நான் இதை பண்ணுவேன்.. முகமது அமீர் அதிரடி பேட்டி.!

தற்போது இந்தியாவில் 13 வது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா ஆறு வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா நீ 12 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 8 புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கின்றன.

- Advertisement -

வருகின்ற சனிக்கிழமை பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி இரண்டு அணிகளின் அரை இறுதி வாய்ப்பையும் தக்க வைத்துக்கொள்ள ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நான்காவது இடத்திற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து நான்கு தோல்விகளுக்கு பிறகு பங்களாதேஷ் அணியுடன் வெற்றி பெற்று இருக்கிறது. மீதி இருக்கும் இரண்டு போட்டிகளில் அந்த அணி நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றால் அந்த அணியும் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் உன்னால் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் பாகிஸ்தான் அணி அறையூதிக்கு தகுதி பெற்று யானையை வீழ்த்தினால் தான் இருப்பான் என்று தான் செய்ததைப் போல் செய்வதாக கூறியிருக்கிறார் . இது தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த உலகக் கோப்பையின் தொடக்கத்தில் விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ஜஸ் பிரீத் பும்ரா ஆகியோர் நல்ல பார்மில் இருந்தால் இந்தியா தான் உலகக் கோப்பையை கைப்பற்றும் என அவர் கூறியிருந்தார்.

தற்போது சமூக வலைதளமான X தளத்தில் பதிவு செய்திருக்கும் அவர் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தினால் தான் இருப்பான் பதான் நடனம் ஆடுவதை போல் நடனம் ஆடுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவு செய்திருக்கும் அவர் “நன்றாக விளையாடி இந்தியாவை வீழ்த்துங்கள் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்தும் போது இருப்பான் இப்பதான் நடனமாடியதைப் போல் நான் உங்களுக்காக நடனமாடுவேன்”‌ என பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற போட்டியின் போது ஆப்கானிஸ்தான் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. அப்போது அந்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மைதானத்தை சுற்றி வளம் வந்தனர். அந்த நேரத்தில் வர்ணனையில் இருந்த இர்பான் பதான் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கானுடன் இணைந்து நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான் இந்தியா அணியுடன் தோல்விக்கு பிறகு தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிக்க அணிகளுடன் தோல்வி அடைந்தது . இதனால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது. தற்போது நியூசிலாந்து அணித் தென்ஆப்பிரிக்காவுடன் தோல்வி அடைந்திருப்பதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனினும் பாகிஸ்தான் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்த வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles