டி20 உகோ-யை விட்டு வெளியேற வேண்டிய பாகிஸ்தான்.. காப்பாற்றிய பாஹிம் அஷ்ரப்.. படம் காட்டிய நெதர்லாந்து.. பரபரப்பான போட்டி முடிவு

நடப்பு உலக கோப்பையின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்விக்கு மிக அருகில் இருந்து தப்பித்த பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் 19வது ஓவரில் 24 ரன்கள் விலாசிய பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் ஃபாகிம் அஷ்ரப் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட முடியாது என பாகிஸ்தான் அறிவித்து விட்டதால் நெதர்லாந்து அணிக்கு எதிராக தோற்றால் வெளியேற வேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்விக்கு அருகில் இருந்து தப்பித்து வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசியது. முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் எட்வார்ட்ஸ் 29 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். சல்மான் மிர்சா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபர்கான் 31 பந்தில் 47 ரன்கள், சையும் அயூப் 13 பந்தில் 24 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஆனால் கேப்டன் சல்மான் அலி ஆகா, பாபர் அசாம் என யாரும் இதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தானுக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் போட்டியின் 19 ஆவது ஓவரை சந்தித்த பாகிம் அஷ்ரப் மூன்று சிக்ஸர்களுடன் 24 ரன்கள் எடுத்தார். இவரின் இந்த அதிரடியால் பாகிஸ்தான் அணி 19. 3 ஓவரில் இலக்கை எட்டி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இல்லையென்றால் மூன்றரை மணி நேரத்தில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேறி இருக்கும்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles