நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் பேசியிருக்கிறார்.
மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் இந்த போட்டியில் விராட் கோலி 60 பந்துகளில் 105 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரஜத் படிதார் பேசும் போது “நாங்கள் புள்ளி பட்டியலில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான முக்கியமான விஷயம். மேலும் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் ஏதாவது ஒரு போட்டியில் முக்கிய பங்களிப்பு செய்து அணியின் வெற்றி பெற வைப்பது எங்களுக்கு பெரிய விஷயமாக அமைந்திருக்கிறது”
“விராட் கோலியை பொறுத்தவரையில் நான் அவர் குறித்து என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அவர் பெரிய சாதனைகளை செய்து பழகி விட்டார். அதனால் இது குறித்து எனக்கு பாராட்ட தோன்றவில்லை” என்று கூறி இருக்கிறார்.

