இன்று ஆர்சிபி அணி தங்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சாதனை இலக்கை அடித்து அசத்தி இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆர்சிபி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி 18 பந்து 28 ர்ன், பில் சால்ட் 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்கள். படிக்கல் சிறப்பாக விளையாடிய அரைசதம் அடித்து 29 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து வந்த கேப்டன் படிதார் 19 பந்துகளில் 48 ரன்கள், ருத்ர தாண்டவம் ஆடிய டிம் டேவிட் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் குவித்தார். ஆர்சிபி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் 231 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ரன்னாக இருந்து வந்தது. இந்த சாதனையை தற்போது ஆர்சிபி அணி முறியடித்துள்ளது.

