இந்த தடவையும் டி20 உலக கோப்பை டவுட் தான்.. பிசிசிஐ இவங்கள பார்த்து திருந்துங்க.. கூறுகிறார் ஹர்பஜன் சிங்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் தொடர்ச்சியாக ஆறு தோல்வியை சந்தித்த பெங்களூர் அணி அதன் பிறகு 5 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது பிளே ஆப் பிரேசில் நீடிக்கிறது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் பெங்களூர் அணியை வெற்றி பெற்றால் பிளே ஆப் சுட்டு இருக்கு தகுதி பெற்று விடும். இந்த நிலையில் பெங்களூர் அணிக்கு வில் ஜாக்ஸ், ரீஸ் டாப்லீ ஆகியோரின் வெளியேற்றம், சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் மொயின் அலி மற்றும் பட்லர் ஆகியோரும் டி20 உலகக் கோப்பைக்கு பயிற்சி பெறும் விதமாக அவர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

- Advertisement -

ஆனால் இந்திய அணி ஐபிஎல் தொடரை முடித்து விட்டுதான் டி20 உலக கோப்பைக்கு தயாராக இருக்கிறது. ஐபிஎல் தொடர் முடிவு பெறுவதற்கும் உலகக்கோப்பை ஆரம்பிப்பதற்கும் பத்து நாள் இடைவெளி இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு அது மிகவும் குறைவாகவே பார்க்கப்படுகிறது. இதே போல கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரை முழுமையாக விளையாடிவிட்டு 2021, 2023ஆம் ஆண்டு இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இழந்தது.

- Advertisement -

இந்த முறையும் மே 26ம் தேதி ஐபிஎல் பைனல் நடைபெறும் நிலையில், ஜூன் இரண்டாம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இதனால் இம்முறையும் இந்திய அணிக்கு உலகக் கோப்பைக்கு தயாராக அதற்கான நாட்கள் மிகவும் குறைவாகவே உள்ளது.

எனவே இந்த முறையும் ஐபிஎல் தொடர் அட்டவணை இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவே ஹர்பஜன்சிங் கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“ஐபிஎல் தொடர் அட்டவணையால் டி20 உலக கோப்பைக்கு முன்பாக அனைத்து இந்திய வீரர்களும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி சில பயிற்சி போட்டிகளில் மட்டும் அமெரிக்காவில் விளையாடுகிறது.

- Advertisement -

ஆனால் இது போதாது. நீங்கள் ஒரு நான்கு அல்லது ஐந்து போட்டிகளில் விளையாடினால் மட்டுமே தகுந்த பயிற்சியாக இருக்கும். குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடி அங்குள்ள சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அது தற்போது நடப்பது போல் தெரியவில்லை. இனிவரும் காலங்களிலாவது 10 முதல் 15 நாட்கள் முன்னரே இந்திய அணி உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக திட்டமிடப்படுதல் வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:டெல்லி வெற்றி.. மாறிய பிளே ஆப் வாய்ப்புகள்.. ஆர்சிபி, சிஎஸ்கே ஹைதராபாத் அணிகளுக்கு டிவிஸ்ட்

ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறி விட்டதால் முன்னணி வீரர்கள் ஆனா ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஐபிஎல் தொடர் முடிவு பெறுவதற்கு முன்னதாகவே இங்கிலாந்து கிளம்ப உள்ளனர் என்ற தகவல் வெளிவருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles