ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா களமிறங்கினார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் இஷான் கிஷன் 48 பந்துகளில் 94 ரன்களை விளாசினார்.
இதன்பின் 232 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி பில் சால்ட் – விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. விராட் கோலி பவுண்டரியுடன் தொடங்க, மறுபக்கம் பில் சால்ட் முதலிலேயே கியரை மாற்றினார். ஓவருக்கு 10 ரன்களை எளிதாக இருவரும் விளாசினார்கள். இதனால் ஆர்சிபி அணி 6 ஓவர்களில் 72 ரன்களை குவித்தது.
அதிரடி காட்டிய பில் சால்ட்
சிறப்பாக ஆடிய விராட் கோலி அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அவர் 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் பொறுப்பை பில் சால்ட் எடுத்து கொண்டு சிக்சராக விளாசினார். தொடர்ந்து வந்த மயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழக்க, ஆர்சிபி அணியின் ஸ்கோர் 11 ஓவர்கள் முடிவில் 127 ரன்களாக இருந்தது.
சிறப்பாக ஆடிய அவர் சிக்ஸ் அடிக்க முயற்சித்து 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து வெளியேற, ரஜத் பட்டிதர் – ஜித்தேஷ் சர்மா கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர்களை விளாசிய நிலையில், ஆர்சிபி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அப்போது 16வது ஓவரை வீச இஷான் மலிங்கா வந்தார்.
பின்தங்கிய ஆர்சிபி
அவர் வீசிய ஓவரில் ரஜத் பட்டிதர் 18 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, ரொமாரியோ ஷெப்பர்ட் டக் அவுட்டாகினார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் ஜித்தேஷ் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழக்க, ஆர்சிபி அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியது. பின்னர் டிம் டேவிட் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ஆர்சிபி வெற்றிக்கு 12 பந்துகளில் 46 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி நேரத்தில் க்ருனால் பாண்டியா ஹிட் விக்கெட்டாகி வெளியேற, ஆர்சிபி அணி 19.5 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக ஐதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் காரணமாக புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

