மூன்று ஃபார்மட் கிரிக்கெட்டில் டி20ஐ மிகவும் சுவாரசியமானது, ரசிகர்களும் அதற்க்கு ஜாஸ்தி. சர்வதேச டி20ஐ உலகக் கோப்பை இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் & அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. ஐ.பி.எல் முடிந்த அடுத்த மாதமே இந்த மெகா டி20ஐ திருவிழா தொடர்கிறது.
முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைன் இந்த ஆண்டு டி20ஐ உலகக் கோப்பை வெல்லும் அணியையும் அதற்கான வலுவான காரணத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப் போட்டி எந்த இரு அணிகளுக்கு மத்தியில் நடக்கும் என்பதையும் கணித்துள்ளனர்.
அவர் கூறியதாவது, “ வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் நடக்கிறது, அந்த அணியும் நன்றாக விளையாடி வருகிறார்கள். அதன் பின் பாகிஸ்தான், இந்தியா போன்ற மற்ற அணிகள் உள்ளன. வெற்றியாளர் குறித்து பெரிதாக ஐடியா இல்லை, ஆனால் என்னைக் கேட்டால் நான் தென்னாபிரிக்கா அணியைத் தான் தேர்வு செய்வேன். ”
“ தென்னாபிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். நடப்புச் சாம்பியன்ஸ் இங்கிலாந்து அணி அண்மையில் மிகப் பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடவில்லை. மறுபக்கம் தென்னாபிரிக்கா அணி அனைத்து துறையில் வலுவாக தென்படுகிறது. ” என்றார்.
தென்னாபிரிக்காவைத் தேர்ந்தெடுத்த காரணத்தை விவரித்த நாசர் ஹுசைன், “ அவர்கள் உள்ளூர் தொடரான சவுத் ஆப்ரிக்கா டி20 மூலம் நல்ல இளம் வீரர்களை மேம்படுத்தி உள்ளனர். அது அவர்களது பலத்தை அனைத்து துறையிலும் அதிகரித்துள்ளது. மேலும் நோர்கியா மற்றும் மகாலா இருவரின் இணைப்பு கூடுதல் பலத்தைச் சேர்க்கும். ”
“ நோர்க்கியாவின் காயம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது எனத் தெரியவில்லை. அவரின் வருகை முக்கிய போட்டிகளில் மிகவும் உதவியாக இருக்கும். தென்னாபிரிக்கா அணியின் பேட்டிங் ஆழமும் அதிகமாக இருப்பதால், அவர்கள் இம்முறை கோப்பையைத் தட்டிச் செல்வார்கள் என நான் நினைக்கிறேன். ” என்றார் நாசர் ஹுசைன்.
இவர் சொன்னது போல தென்னாபிரிக்கா அணி அனைத்துத் துறையிலும் பயங்கரமாக தெரிகிறது. கடந்த ஆண்டு நடந்த 50 இவர் உலகக் கோப்பையில் கூட அதிரடியான ஆட்டத்தைக் காட்டி அரை இறுதி வரை வந்தனர். இந்த முறை கோப்பையை வெரே ஆகவேண்டும் என்ற முழு வீச்சில் வருவர்.