இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
முக்கியமான இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு தற்போது பிரகாசமாகி இருக்கிறது. இந்த வெற்றிக்கு பின்னர் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் வெற்றிக்கான காரணங்கள் குறித்து கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 141 என்று குவித்தது. ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 24 ரன்கள், ஜாஸ் பட்லர் 21 ரன்கள், கேப்டன் சஞ்சு சாம்சன் 11 ரன்கள், ரியான் பராக் 47 ரன்கள் ஜூரேல் 28 ரன்கள் என்று குவித்தனர். சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சிமர்ஜீத் சிங் நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருத்ராஜ் ஒரு முனையில் நிதானமாக விளையாட, மறுமுனையில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி விக்கெட்டுகளை விரைவாக இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ரவிந்திரா 27 ரன்களும், டாரில் மிச்சல் 22 ரன்களும், சிவம் டுபே 18 ரன்களும் குவிக்க இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு பின்னர் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கூறும் பொழுது
“இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியான உணர்வு. லீக் சுற்றின் கடைசி போட்டியில் அதுவும் சொந்த மைதானத்தில் வெற்றி பெற்ற உணர்வு அற்புதமாக இருக்கிறது. இது போன்ற வேகம் குறைவான ஆடுகளத்தில் 55 ரன்கள் ஒரு விக்கெட் இழந்த போது நாங்கள் வெற்றிப் பாதையில் இருப்பதாக உணர்ந்தேன். இந்த ஆடுகளத்தை பொறுத்தவரை மேலும் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்து இருந்தால் ஆட்டம் எதிரணியின் பக்கம் சென்று இருக்கும்.
இதன் காரணமாகவே நான் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நல் வேலையாக எங்களுக்கு எந்தவித அழுத்தமும் ஏற்படவில்லை. இதுவே எங்கள் போட்டியில் நான் கடைசி வரை நிற்பதற்கு உதவியாக அமைந்தது. மேலும் இது போன்ற ஆடுகளிலேயே நாங்கள் விளையாட விரும்புகிறோம். இது போன்ற ஆடுகளங்கள் எங்கள் சுழற் பந்துவீச்சாளர்களை மிகவும் சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது.
இதையும் படிங்க:1119 நாட்கள் ஏக்கத்தை தீர்த்த சிஎஸ்கே.. ருத்ராஜ் பொறுப்பான ஆட்டம்.. 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது
அதே வேளையில் ஆடுகளத்தின் பெரிய பகுதியில் சிக்சர் அடிக்க முடியாத சூழலும் இருக்கிறது. பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளங்களில் நாங்கள் யார்க்கர் பந்துகளை வீசுவதையே விரும்புகிறோம். மேலும் இது போன்ற ஆடுகளங்களில் இப்படி செயல்படுவதை நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

