“நான் சொல்றது மட்டும் உலக கோப்பையில் நடந்தா விராட் கோலி ரிட்டயர்ட் ஆகிடுவார்” – ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி கருத்து.!

2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற வியாழக்கிழமை முதல் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்த 13-வது உலகக் கோப்பை போட்டியில் 10 அணிகள் கலந்து கொள்ள இருக்கின்றன . இந்த உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் இந்தியாவிற்கு வந்து தற்போது பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த பயிற்சி ஆட்டங்கள் வருகின்ற மூன்றாம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இந்த வருடத்திற்கான உலகக் கோப்பை பற்றிய கருத்து கணிப்புகளில் பெரும்பாலான விமர்சகர்களின் கருத்து இந்தியா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் ஒரு அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்பதாகவே இருக்கிறது. மேலும் கடந்த சில மாதங்களாக சராசரியாக விளையாடி வந்த இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளில் அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் கிரிக்கெட் வட்டாரங்களில் நிலவி வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்கள் சர்வதேச கிரிக்கெட்டின் காலங்களில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில் இவர்கள் ஓய்வு பெறலாம் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் 360 டிகிரி வீரருமான ஏபி.டிவில்லியர்ஸ் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி இந்த உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிக்கலாம் என சர்ச்சையான ஒரு கருத்தை வெளியிட்டு கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக தனது பேட்டியில் தெரிவித்திருக்கும் அவர் இந்தியா 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றால் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டின் ஒரு நாள் வடிவத்தில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விரிவாக பேசியிருக்கும் டிவில்லியர்ஸ்” விராட் கோலி 2027-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதை மிகவும் விரும்புவார். ஆனாலும் அதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. விராட் கோலியும் இதைத்தான் சொல்லுவார் என்று நினைக்கிறேன். இந்த வருடம் உலக கோப்பையை வெற்றி பெற்ற பிறகு அவர் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்திற்கு குட்பை சொல்லலாம். உலக கோப்பையை வெற்றி பெற்ற பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஒரு சிறந்த முடிவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” இந்தியா உலகக் கோப்பையை வெற்றி பெற்றால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டும் அவர் விளையாடலாம். அதுபோன்ற ஒரு முடிவை அவர் எடுப்பார் என்று நான் கருதுகிறேன். மீதி இருக்கும் தனது காலங்களில் குடும்பத்துடன் அவர் நேரத்தை செலவு செய்வதற்கு போதுமானதாக இருக்கும். அதனால் இந்த உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெறும்போது அவர் ஓய்வை அறிவிக்கலாம்” என தெரிவித்திருக்கிறார்,

மேலும் தன்னால் ஏன் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியவில்லை என்பதற்கு பதில் அளித்த டிவில்லியர்ஸ்” ஒரு வருடத்தில் இரண்டு முதல் மூன்று மாதங்கள் மட்டுமே ஐபிஎல் போட்டிகளுக்காக கிரிக்கெட் விளையாடுவதால் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக தன்னால் செயல்பட முடியவில்லை என்றும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத போது ஏன் விளையாட வேண்டும்” என்பதால் ஐபிஎல் தொடர்களில் இருந்தும் ஓய்வு பெற்றதாக தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles