இது தெரியாம போச்சே.. தோனி ரிட்டையர்டு ஆக காரணமே அவர் மனைவிதான்.. சாக்ஷியே வெளியிட்ட தகவல்

இந்த கால இளைஞர்களை பொருத்தவரை கிரிக்கெட்டின் கேப்டன் என்று கூறினால் அது மகேந்திர சிங் தோனி ஒருவர்தான். அந்த அளவிற்கு மனிதர் இந்திய கிரிக்கெட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

- Advertisement -

முதன் முதலில் 2007ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற மகேந்திர சிங் தோனி, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அனுபவமே இல்லாத இளம் வீரர்களைக் கொண்டு கோப்பையை வென்று உலக கிரிக்கெட்டையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

- Advertisement -

அதன் பிறகு 2010ஆம் ஆண்டு இவரது தலைமையில் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறிய இந்தியா, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அம்பது ஓவர் உலகக் கோப்பையை 28 ஆண்டுகளுக்குப் பிறகு என்று வரலாற்றுச் சாதனை படைத்தது. அதன் பிறகு 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மூன்று கோப்பைகளில் வென்ற ஒரே கேப்டன் என்று பெருமையையும் மகேந்திர சிங் தோனி பெற்றார்.

- Advertisement -

ஆனால் அதற்குப் பிறகுதான் மகேந்திர சிங் தோனிக்கு சிறிது சரிவு ஆரம்பித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற டோனி தலைமையில் ஆன இந்திய டெஸ்ட் அணி படு தோல்விகளை சந்திக்க ஆரம்பித்தது. 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பின் அதற்குப் பிறகு விராட் கோலி பதவி ஏற்று இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றதெல்லாம் தனிக்கதை.

இந்த நிலையில் 2014ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தது அவரது மனைவி சாக்ஷியினால் தானாம். திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்த குறைந்தது ஒரு ஃபார்மட்டிலாவது ஓய்வு பெற வேண்டும் என்று தோனியிடம் சொன்னதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவரது மனைவி சமூக வலைதளத்தில் பேசியதாவது
“டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகிய போது ஓய்வு பெறப் போகிறார் என்ற தகவல் மட்டும் தெரியும். மேலும் உங்களுக்கு குழந்தை வேண்டும் என்றால் குறைந்தது ஒரு ஃபார்மட்டிலாவது ஓய்வு பெற வேண்டும் அப்போதுதான் குழந்தையுடன் நேரத்தை செலவிட சரியாக இருக்கும் என்று நான் சொன்னது நினைவிருக்கிறது. என் மகள் பிறந்த போது மருத்துவமனையில் அனைவரும் தோனி குழந்தையை பார்க்க வரவில்லையே என்று என்னிடம் கேட்டார்கள்.

இதையும் படிங்க:சும்மா யாரும் தூக்கி கொடுக்கல.. தோனி போட்ட சீக்ரெட் மாஸ்டர் பிளான்.. பிளமிங் வைத்த டெஸ்ட்.. ரகசியத்தை உடைக்கும் ருத்துராஜ்

அதற்குப் பரவாயில்லை என்று நான் கூறினேன். தோனிக்கு கிரிக்கெட் முக்கியம் என்றால் எனக்கு தோனி முக்கியம். அவரது முக்கியத்துவம் எதுவோ எனக்கும் அதுவே முக்கியம்.நீங்கள் அவரது மனைவியாக தியாகம் செய்ய நிறைய விஷயங்கள் இருக்கும் என்று கூறினார்கள். அது தியாகம் இல்லை காதல் என்று சொல்வேன். நீங்கள் மனதுக்குள் இருக்கும்போது அதை தியாகம் என்று சொல்ல முடியாது” என்று கூறினார். அவர் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles