2026 டி20 உலகக் கோப்பை இரண்டாவது சுற்று இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்திருக்கிறது.
இந்த இரு அணிகளும் மோ திக் கொள்ளும் இந்த போட்டியை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. பொதுவாக இரவில் இந்த மைதானத்தில் பனிப்பொழிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்திருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.
மேலும் இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றமாக அக்சர் படேல் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. நெதர்லாந்து அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் தொடர்பு விளையாடுகிறார். பெண் ஆப்பிரிக்கா பேட்டிங் யூனிட்டில் மூன்று இடதுகை வீரர்கள் இருப்பதால் வாஷிங்டன் சுந்தர் விளையாட வைக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் டாஸ் நிகழ்வில் பேசியுள்ள சூரியகுமார் யாதவ் தாங்களும் முதலில் பேட்டிங் செய்ய விரும்பியதாக கூறியிருக்கிறார். அதே சமயத்தில் இந்த போட்டியில் அக்சர் படேலை வெளியில் வைக்க முடிவு மிகவும் கடினமானது என்றும் தெரிவித்திருக்கிறார்.

