இந்திய முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் பும்ராவை அவருடைய இளம் வயதில் எதிர்கொண்டு விளையாடியது குறித்து பேசி இருக்கிறார்.
பும்ரா இளம் வயதிலேயே அதி வேகமாக பந்து வீசக்கூடியவராகவும், அவர் எதிர்த்து விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது என்றும் யுவராஜ் தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும்போது “பும்ராவுக்கு அப்போது 16 வயதிருக்கும். நான் புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்து இந்திய அணியில் நுழைவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர் வலைப்பயிற்சியில் மிகவும் வேகமாக பந்து பேசிக் கொண்டிருந்தார்”
“இந்த பையன் எனக்கு பந்து வீசக்கூடாது என்று நினைத்தேன். பிறகு நீ யாராக இருந்தாலும் எனக்கு பந்து வீசாதே என்று சொல்லிவிட்டேன். இதை என்னிடம் பிறகு ஒருநாள் பும்ரா கூறினார். அவ்வளவு வேகமாக வீசியதால்தான் அப்படி சொன்னேன் என்று அவரிடம் கூறினேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

