இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் நொறுக்கி தள்ளுவார் என ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
சிஎஸ்கே அணி முதல் போட்டியில் மிக மோசமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.
இது குறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். டி20 உலக கோப்பையில் முதல் முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் அவர் சிறப்பாக விளையாடிய ஆட்ட நாயகன் விருது வாங்கினார். இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை அடித்து நொறுக்குவார்”
“பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அவருக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியில் யாருமே கிடையாது. எனவே இன்று அவரது ருத்ர தாண்டவம் நடக்கும்” என்று கூறியிருக்கிறார்.

