சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்று தகுதி பெற முடியாமல் போனதற்கு கேப்டன் ருதுராஜ் தான் காரணம் என ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று கட்டாயம் வெல்லவேண்டிய ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் 21 பந்துகளை சந்தித்து வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் தற்போது அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
இது குறித்து ஸ்ரீகாந்த் பேசும் போது “ருதுராஜ் எப்பொழுதும் தடுப்பாட்டம் மட்டுமே ஆடுகிறார். எனவே இனி அவருடைய பெயர் டக்ராஜ். அவர் ஆடுகின்ற ஆட்டத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் மெதுவாக விளையாடி மற்றவர்கள் மேல் அழுத்தம் ஏற்றி அவுட் செய்து விடுகிறார்”
“இந்த போட்டியில் அவர் சந்தித்த 21 பந்தில் வெறும் 25 ரன் எடுத்திருந்தால் கூட வெற்றி பெற ஒரு வாய்ப்பு உருவாகி இருக்கும். இசான் தனது முதல் 25 பந்தில் பொறுமையாக இருந்து தான் பிறகு அதிரடியாக விளையாடினார். இவர் கடைசியாக அதையும் செய்யவில்லை” என்று கூறி இருக்கிறார்.

