விராட் கோலி ரசிகர்கள் என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார்கள்.. பரபரப்பை கிளப்பும் சைமன் டவுல்

இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக விளங்கி வரும் விராட் கோலி தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விளையாட தயாராகி வரும் நிலையில் விராட் கோலி ரசிகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் சொத்தாக கருதப்படும் விராட் கோலி 2008ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் அறிமுகமாகி பல சாதனைகளைப் புரிந்து சச்சினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இவரது ஆக்ரோசத்திற்காகவும், களத்தில் இவரது அர்ப்பணிப்புக்காகவே பல கோடி ரசிகர்கள் இவரை பின் தொடர்கிறார்கள்.

- Advertisement -

கிரிக்கெட்டின் ஜாம்பவானாக எண்ணற்ற சாதனைகளை புரிந்த விராட் கோலி இடையில் இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரும் சரிவைச் சந்தித்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பேட்டிகளில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தாத நிலையிலும், ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக நின்றனர். அதன் பிறகு மீண்டும் எழுந்து தன்னை சரி செய்து தற்போது பார்மின் உச்சத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் கோலி ஆர்சிபி அணி 17 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத நிலையிலும் ஆர்சிபி ரசிகர்கள் விராட் கோலி இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அந்த அணிக்காக தொடர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் விராட் கோலி ஐபிஎல்லில் குறைந்த ஸ்டேக்ரேட்டில் ஆடியதற்காக நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் அவரை விமர்சித்ததை அடுத்து கோலி ரசிகர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பரபரப்பு கிளப்பும் தகவலை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“விராட் கோலி கிரிக்கெட்டில் வல்லவராக இருக்கிறார். போட்டியில் தமது தரம் தாழ்ந்து விடக்கூடாது என்பதில் கோலி கவனமாக இருப்பார். விராட் கோலி குறித்து நான் ஆயிரம் விஷயங்களை பாராட்டி பேசி இருக்கிறேன். இருப்பினும் அவர் தவறு செய்யும்போது அவரது சிறு தவறை நான் சுட்டிக்காட்டியதற்காக அவரது ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

- Advertisement -

அவர் செய்யும் சிறு தவறை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் கூறினேன். நான் எப்போதுமே விராட் கோலியை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததில்லை. நான் பலமுறை அவரிடம் நேர்காணலில் சந்தித்து நல்ல முறையில் பேசி உள்ளேன். விராட் கோலி மட்டுமல்லாமல் பாபர் ஆசாம் குறித்தும் இதே கருத்தை முன் வைத்துள்ளேன் என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:அம்மாடியோ.. இதுக்கே தலை சுத்துதே.. ஷாரூக்கானை விட பல மடங்கு கொண்ட காவ்யா மாறனின் சொத்து மதிப்பு

இந்திய கிரிக்கெட்டில் சச்சின், தோனிக்குப் பிறகு விராட் கோலிக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அத்தகைய ரசிகர்களுக்காக இந்த முறை டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது விராட் கோலியின் எதிர்பார்ப்பும் கூட ஆகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles