நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான அணி தன்னுடைய அனைத்து போட்டிகளையும் இலங்கையில் வைத்து விளையாடுகிறது. மேலும் தற்போது பாகிஸ்தான் அணியில் சுழல் பந்து வீச்சு மிகவும் பலமாக இருக்கிறது. இந்த நிலையில் ஐசிசி மற்றும் பிசிசிஐ இரண்டும் சேர்ந்து இலங்கையில் பாகிஸ்தான் அணிக்கு சுழல் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளங்களை கொடுக்க மாட்டார்கள் என சக்லைன் முஸ்டாக் விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து சகலைன் முஸ்டாக் பேசும் பொழுது “ஐசிசி மற்றும் பிசிசிஐ இரண்டும் பாகிஸ்தானுக் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை கொடுக்கவே கொடுக்காது. இதற்கு முன் இலங்கை ஆடு களத்தில் நான் புல் இருந்து பார்க்கவே. ஆனால் பாகிஸ்தானின் முதல் போட்டிக்கு ஆடுகளத்தில் புல் இருக்கிறது”
மேலும் டாஸ் நிகழ்வில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பேசும்பொழுது ” இந்த ஆடுகளத்தில் புல் இருக்கிறது மேலும் வானமும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. எனவே நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். ஆனால் இலங்கையில் ஆடுகளத்தில் புல் இருந்து தான் இப்பொழுது தான் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

