இனிமே நான் பேசவே விரும்பல.. எவ்வளவு கஷ்டப்படுறேன்னு அவங்க ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும் – ரிஷப் பண்ட் உருக்கம்

இன்று ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் 50 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து தனது அணியை தனியாளாக வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

கடந்தாண்டு ஐபிஎல் தொடர் அவருக்கு மிகவும் மோசமானதாக அமைந்தது. இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் மேலே வந்து தற்போது விளையாடி வருகிறார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் தனி ஆளாக வெற்றி பெற வைத்தது அவருடைய நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள ரிஷப் பண்ட் கூறும்போது “முடிவுகள் நல்ல விதமாக வரும் பொழுது நல்லவிதமாகவே பேச்சுகளும் வரும். இது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். நாங்கள் விமர்சனங்களை எடுத்துக் கொள்ளக்கூடிய அணியாக இருக்கிறோம். அதிலிருந்து முன்னேறி செல்ல விரும்புகிறோம்”

- Advertisement -

“நான் சிறப்பாக தயாராகி 200 சதவீதம் முயற்சி செய்கிறேன். நான் எந்த அளவிற்கு கடினமாக உழைக்கிறேன் என்பது என்னுடைய பணி மற்றும் பணி நிர்வாகத்திற்கு நன்றாக தெரியும். எனக்கு அதுதான் மிகவும் முக்கியமானது. இனி என்னுடைய பேட் பேசட்டும்; நான் பேச விரும்பவில்லை” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles