நீங்க வேணா பாருங்க.. டி20 உலக கோப்பைல இவரோட ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் இந்திய அணி அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

- Advertisement -

இதற்காக ரோஹித் சர்மா, பும்ரா, சூரியகுமார் யாதவ் மற்றும் பல முன்னணி இந்திய வீரர்கள் முன்னதாகவே அமெரிக்காவிற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விராட் கோலி, சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் மட்டும் இன்னும் இந்திய அணியில் இணையாமல் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்திய அணிக்கு விக்கெட் கீப்பங்கை பொறுத்த வரை சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். அதிலும் ரிஷப் பண்ட் முதலில் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சஞ்சு சாம்சன் மூன்றாவது களம் இறங்கி விளையாடக்கூடிய வீரர்.

- Advertisement -

பண்ட் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக விளையாடக் கூடியவர். இந்திய அணியில் மூன்றாவதாக களமிறங்க சூரியகுமார் யாதவ் ஏற்கனவே இருக்கும் நிலையில், பண்ட் மட்டுமே இதில் அதிக முக்கியத்துவம் பெரும் வீரராக இருக்கிறார். கடந்த வருடம் இவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் கலந்து கொள்ளவில்லை.

அதன் பிறகு தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்து மீண்டும் உலக கோப்பை அணியில் தேர்வு செய்யும் அளவுக்கு தன்னை வலுப்படுத்தி இருக்கிறார். இதனால் வருகிற டி20 உலக கோப்பையில் பண்ட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டெல்லி அணியின் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் முன்னாள் வீரருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ரிக்கி பாண்டிங் விரிவாக கூறும்பொழுது
“ரிஷப் பண்ட் திரும்பவும் இந்திய அணிக்காக விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி அணியில் அவருடன் இணைந்து பணிபுரிந்த ஒவ்வொரு நொடியும் நான் ரசித்தேன். இது அவருக்கு குறிப்பிடத்தக்க கம்பேக் மற்றும் வருகிற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க:பயிற்சியாளர் பதவி கம்பீர் வேண்டாம்.. தோனியை கொண்டு வாங்க.. காரணம் இருக்கு.. கூறுகிறார் விராட் கோலியின் கோச்

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து யாருக்கும் கவலையில்லை. ஏனெனில் அவர் அவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் என்ன மாதிரியான வீரர் அவரது ஆற்றல் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். எனவே அவர் இந்த உலக கோப்பையில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles