இதே நெனப்போட உள்ள வராதீங்க தென் ஆப்பிரிக்கா.. இந்தியாகிட்ட மாட்டிக்குவீங்க- ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று பார்படாஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியை எப்படி வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தென் ஆப்பிரிக்க அணிக்கு சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே வலுவான அணியாக திகழ்ந்து வருகிறது. அந்த அணியில் ஸ்மித், காலிஸ், டிவில்லியர்ஸ், டுமினி, ஸ்டைன் போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாடியிருந்தாலும் இதுவரை ஒரு ஐசிசி தொடரை கூட தென்னாப்பிரிக்காவால் வெல்ல முடியவில்லை. எனவே இந்த 32 ஆண்டு கால சோகத்தை தீர்க்கும் வகையில் தற்போது டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரையும் முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

நட்சத்திர வீரர்களால் செய்ய முடியாததை தங்கள் அணி செய்யும் என்பது போல எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் இறுதிப் போட்டியை சாதாரணமாக நினைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், ஆனால் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும் மனநிலையை வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது ” பெரும்பாலானோர் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை மற்றும் ஒரு போட்டி என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் இறுதிப் போட்டியின் தீவிரத்தை மறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்படி இருக்கக் கூடாது இறுதிப்போட்டியில் விளையாடும் முந்தைய நாளும் போட்டி நாளும் மகிழ்ச்சியாக மனதை வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பு எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறோமா? என்பதையும் நாம் உறுதி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது தென்னாப்பிரிக்கா அணி வெற்றிகரமான அணியாக இந்த தொடரில் செயல்பட்டு வருகிறது. இதனால் மெனக்கெட்டு எதையும் மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் அவர்களது வழியிலேயே சாதாரணமாக ஆனால் கவனமாக விளையாடினால் மட்டும் போதும்.

இதையும் படிங்க:முடிவுக்கு வருகிறதா கோலி ரோஹித் சகாப்தம்.? இன்று டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி.. பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் ரசிகர்கள்

களத்திற்கு முன்னால் அணி எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறதா? என்பதையும் தெளிவாக மனதில் வைக்க வேண்டும். தங்களுக்கு தாங்களே சிறந்த வாய்ப்பை வழங்கினால் இறுதிப்போட்டியில் அவர்கள் வெற்றி பெறலாம் என்று ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். இந்திய அணியும் தற்போது ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் மிக வலுவாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதால் இந்த இரண்டு அணிகளுக்கிடையான போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles