சேசிங் செய்வது எப்படி என்று விராட் கோலி சொல்லிக் கொடுத்தார்.. ஆர்சிபியில் விளையாடிய அனுபவம் குறித்து வில் ஜாக்ஸ்

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தற்போது நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜாக்ஸ் பெங்களூர் அணி குறித்தும் விராட் கோலி குறித்தும் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

பிக்பாஸ் லீக் ஆட்டத்தில் இவரது அதிரடி ஆட்டத்தை கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த ஏலத்தில் இவரை ஆர்சிபி அணிக்காக வாங்கியது. அதற்குப் பிறகு மேக்ஸ்வெல் பெங்களூர் அணியில் இடம் பெற்று இருந்ததால் இவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. மேக்ஸ்வெல் இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பியதால் வில் ஜாக்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

சில போட்டிகளில் தடுமாறிய ஜாக்ஸ் அதற்கு பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 41 பந்துகளில் அதிரடியாக விளையாடி 10 சிக்ஸர்கள் அடித்து 100 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார். அதிலிருந்து தான் பெங்களூர் அணி முழுமையான எழுச்சி பெற்றது என்றே கூறலாம்.

- Advertisement -

அதற்குப் பிறகு பெங்களூர் அணி வீரர்களின் திறமையான பங்களிப்பால் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த சூழ்நிலையில் ஜாக்ஸ் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் காரணமாக தாயகம் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் பெங்களூர் அணி போதிய வீரர்கள் இல்லாமல் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவி வெளியேறியது.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணி குறித்தும் விராட் கோலி குறித்தும் வில் ஜாக்ஸ் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் இது குறித்து அவர் கூறும் பொழுது
“ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஒரு திறமையான அணி.அது வீரர்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கிறது. விராட் கோலி, டு பிளஸ்சிஸ் போன்ற நட்சத்திர வீரர்களுடன் விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

- Advertisement -

விராட் கோலி நிஜமாகவே ஒரு அற்புதமான வீரர். நாங்கள் ஒன்றாக பேட்டிங் செய்யும்பொழுது விராட் கோலி எனக்கு போதிய பயிற்சிகளை வழங்கினார். எப்படி சேஸ் செய்வது, எப்படி ஆட்டத்தை வேகப்படுத்துவது என்று சில விலைமதிப்பற்ற கருத்துக்களை எனக்கு வழங்கினார். அது எனக்கு ஆட்டத்திலும், தனிப்பட்ட முறையிலும் பெரும் உதவி அளித்தது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:எப்போதுமே நீங்கள் ஒரு ஜோக்கர்தான்.. நான் கொல்கத்தா அணிக்காக இதை செய்தேன் ஆனால் நீங்கள்.. அம்பாத்திராயுடுவை நேரடியாகவே தாக்கிப் பேசிய பீட்டர்சன்

அடுத்த ஐபிஎல் தொடரில் மெகா ஆக்சன் நடைபெறுவதால் வில்ஜாக்ஸ், விராட் கோலி, பட்டி தார் போன்ற நட்சத்திர வீரர்களை பெங்களூர் அணி நிர்வாகம் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சீசனில் பெங்களூர் அணி நிர்வாகம் சரியான வீரர்களை எடுத்து கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே ஆர்சிபி ரசிகர்களின் தற்போதைய வேண்டுகோள் ஆகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles