புதிய கேப்டன் யாரு? அமைதி காக்கும் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம்.. பதவியேற்க மறுத்த கேஎல் ராகுல்.. என்ன காரணம்?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக ஐபிஎல் தொடருக்காக இந்திய அணி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ம் தேதி கொல்கத்தா மைதானத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த சீசனில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேகேஆர் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானேவும், துணைக் கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டார்.

- Advertisement -

டெல்லி அணியில் கேஎல் ராகுல்

- Advertisement -

பஞ்சாப் அணிக்கு இம்முறை ஸ்ரேயஸ் ஐயர் கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ள சூழலில், டெல்லி அணியின் கேப்டன் யார் என்பது மட்டும் இதுவரை தெரியாமல் உள்ளது. டெல்லி அணி தரப்பில் ஸ்ரேயஸ் ஐயரை வாங்க தீவிரமாக முயற்சிகள் நடந்த போது, பஞ்சாப் அணி அவரை ரூ.26.5 கோடிக்கு வாங்கியது. இதனால் டெல்லி அணி வேறு வழியின்றி கேஎல் ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கி இருக்கிறது. 

ஏற்கனவே லக்னோ அணியை 3 சீசன்களில் கேஎல் ராகுல் வழி நடத்தியுள்ளார். இதனால் மீண்டும் டெல்லி அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அக்சர் படேலுக்கு கேப்டன் பதவியை அளிக்க டெல்லி அணியின் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

- Advertisement -

அக்சர் படேலுக்கு பொறுப்பு?

இதுகுறித்து விசாரிக்கையில் கேஎல் ராகுலிடம் கேப்டன்சி பதவியை ஏற்க கோரிய போது, அவர் வீரராக தொடர விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இதனால் டெல்லி அணியில் நீண்ட ஆண்டுகளாக விளையாடி வரும் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் பக்கம் டெல்லி உரிமையாளர் பார்வையை திருப்பி இருக்கின்றனர். 

2019ம் ஆண்டு முதலே டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அக்சர் படேல் விளையாடி வருகிறார். இருப்பினும் அக்சர் படேல் இதுவரை கேப்டன்சியை ஏற்க ஒப்புக் கொண்டதாக கூறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்து இந்தியா வந்துள்ள வீரர்கள், அடுத்த சில நாட்களில் ஐபிஎல் அணிகளுடன் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. இதன்பின் டெல்லி அணி தரப்பில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பலாம். 

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles