இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஜஸ்பிரித் பும்ரா மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். டி20, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என இந்திய அணியின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக திகழும் இவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் போது தான் அனைவராலும் அறியப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் தனது கல்லூரி நினைவுகள் குறித்து பகிர்ந்த பும்ரா, ஆரம்ப காலத்தில் தான் வேகபந்துவீச்சாளர் எல்லாம் கிடையாது எனவும், நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர் ஆக மட்டுமே இருந்தேன் எனவும் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “என் கல்லூரி ஆரம்ப நாட்களில் நான் வேகப்பந்து வீச்சாளர் கிடையாது. நான் ஒரு ஆப் ஸ்பின் பவுலர் அப்போதும் கூட நான் விக்கெட்டுகள் எடுத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங் பணியையும் செய்து இருக்கிறேன். மேலும் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் களமிறங்கி பேட்டிங்கும் செய்து இருக்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.

