தென் ஆப்பிரிக்காவின் தலைசிறந்த முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் எல்லா பந்துவீச்சாளர்களையும் 15 வயதான வைபவ் சூரியவன்சி பயப்பட வைத்திருக்கிறார் என கூறியிருக்கிறார்.
நேற்று வைபவ் சூரியவன்சி பும்ரா ஓவரில் முதல் பந்தை சிக்ஸர் அடித்ததுடன் அதே ஓவரில் இன்னொரு சிக்ஸரும் அடித்தார். அந்த ஓவரில் மொத்தம் 14 ரன்கள் எடுத்தார்.
இதுகுறித்து அவர் பேசும்போது “வைபவ் சூரியவன்சி எல்லா பந்துவீச்சாளர்களையும் பயமுறுத்தி இருக்கிறார். இந்த பயம் பும்ராவுக்கும் இருக்கிறது. அதனால்தான் அவர் அந்த முதல் பந்தை தவறாக வைத்து விட்டார். நீங்கள் பயத்துடன் இருந்தால் இப்படி தவறுகளை செய்வீர்கள்”
“நீங்கள் அவருக்கு எதிராக லென்த்தில் தவறு செய்தால் உடனடியாக பந்தை வெளியில் அடித்து விடுவார். அது தலைசிறந்த பவுலரான பும்ராவாக இருந்தாலும் கூட” என்று கூறியிருக்கிறார்.

