நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தங்கள் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தொடர் மாற்றங்களை செய்வது பற்றி கவலைப்படாமல் மூன்று வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு 28 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் இருவரும் நீக்கப்பட வேண்டும்.
மேலும் உர்வில் படேல், ஜேமி ஓவர்டன், மற்றும் சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அகேல் ஹுசைன் மூவரும் கொண்டுவரப்பட வேண்டும். இதன் மூலம் பலவீனமான சிஎஸ்கே மிடில் ஆர்டர் பலமாக மாறும். மேலும் பவுலிங் யூனிட்டும் பலமடையும். எட்டு வரையில் பேட்டிங் மற்றும் 6 பவுலர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே பிளேயிங் லெவன்:
ருதுராஜ்
சஞ்சு சாம்சன்
ஆயுஸ் மத்ரே
சர்பராஸ் கான்
சிவம் துபே
உர்வில் படேல்
ஜேமி ஓவர்டன்
அகேல் ஹுசைன்
நூர் அகமத்
மேட் ஹென்றி
அன்சூல் காம்போஜ்
கலீல் அகமத் (இம்பாக்ட் பிளேயர்)

