நேற்று சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் தான் மெதுவாக 22 பந்தில் 28 ரன்கள் எடுத்ததற்கான காரணத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியிருக்கிறார்.
தற்போது ஐபிஎல் தொடரில் பேட்டிங் மிகவும் ஆக்ரோஷமாக மாறி உள்ளது. இப்படியான நிலையில் ஆடுகளம் சாதகமாக உள்ள போதும் மெதுவாக விளையாடியதுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என சிஎஸ்கே ரசிகர்கள் ருதுராஜை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து பேசி உள்ள ருதுராஜ் கூறும் பொழுது ” இந்த ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் கிரிப் ஆகி வந்தது. மேலும் நான் கிரிஸில் கொஞ்ச நேரம் செலவிடலாம் என்று நினைத்தேன். பிறகு அட்டாக் செய்து விளையாடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் நான் தவறான நேரத்தில் அவுட் ஆகி விட்டேன்”
“இந்த போட்டியில் தோல்வியடைந்து இருந்தாலும் ஆயுஸ் மற்றும் துபே இருவரது பேட்டிங்கும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. நாங்கள் அடுத்த போட்டியில் திரும்பி வருவோம்” என்று கூறியிருக்கிறார்.

