நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் பரிதாபகரமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து தொடர்ந்து நான்கு போட்டிகளாக எல்லா அணிகளிடமும் தோல்வியடைந்து வருகிறது.
இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசும்போது ” எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதலில் தோல்விக்கு காரணம் தனிப்பட்ட வீரர்களா? ஒட்டுமொத்த அணியுமா? இல்லை நாங்கள் உருவாக்கும் திட்டங்களா? என்று நாங்கள் கண்டறிய வேண்டும். நாங்கள் ஆரம்ப நிலைக்கு சென்று அலச வேண்டும்”
“மேலும் இதே வீரர்களுடன் தொடர வேண்டுமா? அப்படி தொடர்ந்தால் எங்களால் வெற்றிப் பாதைக்கு திருப்ப முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒருவேளை முடியாது என்றால் சில கடினமான முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

