அபிஷேக் ஷர்மா தனது தவறுகளை சரி செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் என ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா எட்டு பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்து, ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொள்ளாமல் விளையாடி ஆட்டம் இழந்தார். எல்லா ஆடுகளங்களிலும் ஒரே போல விளையாட முயற்சி செய்வது விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” பெங்களூர் சின்னசாமி ஆடுகளம் முதலில் விளையாடும் பொழுது கொஞ்சம் ஈரத்துடன் காணப்படும். இந்த நாள் கொஞ்சம் பந்து ஆடுகளத்தில் அலையும். நான்கு ஓவர்கள் பொறுமையாக இருந்தால் பிறகு ரன்கள் எடுக்கலாம். ஆனால் அபிஷேக் ஷர்மா ஹெட் ஆடுகளத்தை கணிக்காமல் ஏமாற்றம் அளித்திருக்கிறார்கள்”
“அபிஷேக் ஷர்மாவுக்கு எங்கு பந்து வீச வேண்டுமென நான் நேற்று பேசிக் கொண்டிருந்த பொழுதே அவர் ஆட்டம் இழந்து விட்டார். நான் அவருடைய ரசிகன் தான் ஆனாலும் அவர் தவறுகளை சரிசெய்யாமல் இருந்து வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.

