19ஆவது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் தோனி என்ன மாதிரியான ரோல் கொடுப்பார் என்பது குறித்து அணில் கும்ப்ளே பேசியிருக்கிறார்.
தோனிக்கு அடுத்து அவரது இடத்தை நிரப்பக்கூடிய சரியான வீரராக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் கிடைத்திருக்கிறார். தற்பொழுது சிஎஸ்கே அணியில் அடுத்த தோனியாக இவரையே விளம்பரப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.
இது குறித்து அனில் கும்ப்ளே கூறும்பொழுது “சஞ்சு சாம்சனுக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படும். அவர் களத்தில் நின்று ருதுராஜுடன் இணைந்து எல்லா பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார். இவருக்காக விக்கெட் கீப்பிங் இடத்தை விட்டுக் கொடுத்து மகேந்திர சிங் தோனி வெளியில் அமர்ந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்”
“மேலும் தற்போது உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார், மேலும் தமிழ் பேசத் தெரிந்தவர் என்பதால் சிஎஸ்கே அணி ரசிகர்களுடன் மிகப் பெரிய நெருக்கம் சாம்சனுக்கு கிடைக்கும். இது அந்த அணிக்கு பெரிய ஆதரவை உருவாக்கும்” என்று கூறி இருக்கிறார்.

