வைபவ் சூரியவன்சி விராட் கோலியை பார்த்து ஒரு முக்கிய விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியிருக்கிறார்.
வைபவ் சூரியவன்சி தனக்கு கிடைக்கும் நல்ல தொடக்கத்தை பெரிய ஸ்கோர் ஆக மாற்ற முடியாமல் திணறி வருகிறார். அவரால் நீண்ட இன்னிங்ஸ் விளையாட முடியாமல் இருந்து வருகிறது.
இதுகுறித்து விக்ரம் ரத்தோர் கூறும்போது “வைபவ் பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார். தனக்கு கிடைக்கும் தொடக்கத்தை பயன்படுத்தி பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மெதுவான பந்துக்கு ஆட்டம் இழப்பது என்பது எல்லோருக்கும் இருக்கும் பலவீனம்தான். அதை இவருடைய பலவீனம் என்று சொல்ல முடியாது”
“விராட் கோலி பந்தை பலமாக அடிக்கக்கூடியவர் கிடையாது. ஆனால் அவருடைய பலம் எதுவோ அதற்கு ஏற்ற வழியில் விளையாடிதான் பெரிய ஸ்கோர் அடிக்கிறார். எனவே இதை வைபவ் புரிந்து கொண்டு அந்த வகையில் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

