உங்கள் வலியை என்னால் உணர முடியும்.. இன்னும் பல சாதனைகள் நீங்கள் செய்ய வேண்டும்- சச்சின் உணர்ச்சிகரமான பதிவு

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இவர்கள் இருவரையும் பாராட்டி தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஏறக்குறைய இருவரும் ஒரே காலத்தில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். 2007ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்த காலத்தில் உலகக் கோப்பை வென்ற அணியில் ரோஹித் சர்மா இருந்தார். ஆனால் விராட் கோலி 2008ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானதால் டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

- Advertisement -

அதற்குப் பிறகு பல டி20 உலக கோப்பைகள் விளையாடியும் இந்திய அணிக்கு அது மட்டும் எட்டாமல் இருந்தது. சாம்பியன்ஸ் டிராபி, 50 ஓவர் உலகக்கோப்பை என இரண்டு ஐசிசி டிராபிகளை இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடி வென்ற நிலையில், டி20 உலக கோப்பை மட்டும் எட்டாமல் இருந்தது. மேலும் டி20 ஃபார்மெட்டில் இவர்கள் கடைசி கட்டத்தில் இருந்ததால் இந்த முறை வென்று கோப்பையுடன் விடை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதை கடைசியாக வென்றும் விட்டனர்.

இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து சச்சின் விரிவாக கூறும் பொழுது “விராட் கோலி இதுவரை 6 உலகக் கோப்பைகள் விளையாடி நிலையில், கடைசியாக அதை வென்ற தருணம் எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் இது முடிவு அல்ல.

- Advertisement -

நீங்கள் இன்னும் நீண்ட வடிவிலான தொடர்களை விளையாடி அதன் டிராபிகளையும் கைப்பற்றுவீர்கள் என்று வாழ்த்துகிறேன். ரோஹித் சர்மா நீங்கள் இளைஞராக இருந்து உலகக்கோப்பை வென்றதே உங்கள் அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன். உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கு பெருமை சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி அனைத்தையும் பார்த்து பாராட்டுகிறேன். நீங்கள் இருவரும் இந்த தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க:அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இந்திய அணிக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை.. மிரண்ட கிரிக்கெட் உலகம்

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 ஃபார்மேட்டில் இருந்து மட்டும் தற்போது ஓய்வு அறிவித்திருக்கிறார்கள். மேலும் ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை வென்ற இந்திய அணியை வாழ்த்தும் விதமாக இந்திய அணி தாய்நாடு திரும்பியதும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles